ஐரோப்பிய சங்கத்தின் சிரேஷ்ட இராஜ தந்திரி அதிகாரிகள் சிலர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரசியலமைப்பின் சீர்த்திருத்த செயற்பாடுகள், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை செயல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் இதன்போது வெளிவிவாகர அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கைகளை புதுப்பித்தல் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.