இந்த முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு பொருட்களின் விற்பனைகள் அதிகரித்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தினால் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனால் பட்டாசு பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பல சவால்களை எதிர்நோக்கியிருந்தனர்.
எவ்வாறாயினும் இந்த முறை விற்பனைகள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.