தரமற்ற தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி!

blob 44
blob 44

மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட நிறுவனம் ஒன்றினது தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுங்கப்பிரிவின் ஊடக பேச்சாளர், சட்ட நடவடிக்கை தொடர்பான உதவி சுங்கப்பணிப்பாளர் சுதத் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, 15 மெற்றிக் டன் அளவுடைய 6 கொள்கலன்கள் அடங்கிய தேங்காய் எண்ணெய் ‘பார்பரா’ கப்பலின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சுங்கப்பிரிவின் ஊடக பேச்சாளர், சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.