பிலவ புத்தாண்டு சிறப்பாக மலரட்டும் என ஜெ.மயூரக்குருக்கள் வாழ்த்து

1523669864781
1523669864781

மலரும் பிலவ வருட புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பு மிக்க ஆண்டாக மலரட்டும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் இன்று அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மலருகின்ற புதிய வருடமான பிலவ வருடமானது உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களிற்கும் நல்லதோர் ஆண்டாக இருக்க வேண்டும். பல சோதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்த ஆண்டானது கடந்து புதிய வருடத்திலே அனைவரும் காலடி எடுத்து வைக்கின்றோம்.

இந்த ஆண்டு உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மேன்மை அடைகின்ற ஆண்டாக மலர வேண்டும் என்பதே அனைவரது எண்ணங்களுமாகும். அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்வினைத் தருகின்ற ஆண்டாக விவசாயத்தில் சிறக்கும் ஆண்டாக அமையவும் நோயற்ற வாழ்வினையும் குறைவற்ற செல்வத்தினையும் தருவதாகவும் உயிர்களிடத்தே அன்பு பெருகவும் இல்லாத மனிதர்களுக்கெல்லாம் உதவிகள் புரிந்து அவர்களும் மேன்மையடையவும் முடிந்தவரை இயலாதிருப்போர்க்கு ஈய்ந்து மன நிம்மதிகளை பெறுவதோடு அனைவரும் இந்த வருடம் பிறக்கின்ற புண்ணிய வேளையில் சங்கிரானதிக் காலங்களில் மருத்துநீர் வைத்து நீராடி இறை தரிசனம் செய்து பெரியோர்களை வணங்கி அன்றைய பொழுதினை நற்பொழுதாக கொண்டாடி நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து மகிழ்ந்திருங்கள். எல்லோருக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துகளும் ஆசிகளும் என குறிப்பிட்டுள்ளார்.