சபுகஸ்கந்தவில் 100 கிலோ ஐஸ் போதைப்பொருள் சிக்கியது

download 1 14
download 1 14

சபுகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரக்கஹாவத்த பிரதேசத்தில் சுமார் 100 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் வேளையில் இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் நேற்றுமுன்தினம் 100 கிலோ ஐஸ் மற்றும் 100 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

அதன்தொடர்ச்சியாக ஜாஎல பிரதேசத்தில் நேற்று 13 கிலோ ஐஸுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இன்று(12) சபுகஸ்கந்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 91 பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அதில் சுமார் 100 கிலோ ஐஸ் போதைப்பொருள் அடங்கியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.