பாதுகாப்பற்று மகிழுந்தை செலுத்தியவரிடம் வாக்குமூலம் பதிவு

1618216991 8184780 hirunews
1618216991 8184780 hirunews

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் மகிழுந்தை செலுத்திய சாரதி, அதன் முதலாவது உரிமையாளர் மற்றும் இரண்டாவது உரிமையாளரின் புதல்வர் ஆகியோரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் களனிகம அதிவேக நெடுஞ்சாலை பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு முன்னிலையாகாத மகிழுந்தில் பயணித்த 4 இளைஞர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.