மேலதிகமாக, 400 பேருந்துகள் சேவையில்!

bus 1598836497
bus 1598836497

புத்தாண்டை முன்னிட்டு, தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக, மேலதிக பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக பயணிக்கும் பேருந்துகளுக்கு மேலதிகமாக, 400 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காகவும், மீள கொழும்பு திரும்புவோருக்காகவும், புத்தாண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விசேட தொடருந்து சேவைகள் அவ்வாறே இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், புத்தாண்டு காலப்பகுதியில், அலுவலக தொடருந்து சேவைகள் உள்ளிட்ட சுமார் 30 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்மைய நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை மாத்திரம் குறித்த சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.