சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 658 மதுபான போத்தல்களுடன் சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டதாக கொள்ளுபிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கில் குறித்த மதுபான போத்தல்களை கொண்டு வந்துள்ளார்.
கொள்கலன் ஒன்றில் குறித்த மதுபானத் தொகை நுட்பமான முறையில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.