தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 வது ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி அறிவகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர்மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பச்சிலைப்பள்ளி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது .