ஐ.தே.க.யின் தீர்மானம் 6 பேர் கொண்ட குழுவில் 2 பேர் இராஜினாமா?

2 rt
2 rt

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட விசேட குழுவிலிருந்து முன்னாள் அமைச்சர்களாக ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும் தலதா அதுகோரல ஆகியோர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற குழுக்களில்  தொடர்ந்தும் பங்கெடுப்பது காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையாகும் எனவும் இதனாலேயே தாம் இதிலிருந்து நீக்கிக் கொள்ள தீர்மானித்ததாகவும் இருவரும் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படுவது அவசியம் எனவும், அவ்வாறின்றி தலைமைத்துவ சபை அமைப்பதோ அல்லது வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுப்பதோ பயனற்றது எனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.