கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

7 a1
7 a1

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அரசாங்கத்துடன் உள்ள கட்சித் தலைவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தின் முன்னாள் உள்ள சவால்கள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும், அவற்றை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.