சம்பிக்க வெளிநாடு செல்ல தடை!

1 erer
1 erer

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதியான துசித திலும் குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இடம்பெறும் போது வாகனத்தை முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவே செலுத்தியுள்ளதாக தகவல்கள் உள்ளதாகவும், அவரிடம் இது தொடர்பில் வாக்கு மூலம் பெற வேண்டியுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

இதனால், இக்காலப் பகுதியில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதனால் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தைக் கோரியதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.