இப்புத்தாண்டு மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும் – மகேசன்

க. மகேசன்
க. மகேசன்

பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும் இப்புத்தாண்டு நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன் இந்த கொவிட்19 தொற்றுச்சூழ்நிலையில் சகல பொதுமக்களும் அவசியமற்ற நடமாட்டங்களையும் ஒன்றுகூடல்களையும் தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க சமூக இடைவெளி பேணி முக கவசம் அணிந்து தங்களையும் தங்கள் குடும்ப உறவுகளையும் பாதுகாப்பதூடாக தொற்றுலிருந்து சமூகத்தை பாதுகாக்க மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.