இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Rainning
Rainning

நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்  மாகாணத்தின் கடற்கரை பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (13) திகாலி, மல்லாவி, வன்னிவிளாங்குளம், இடைக்காடு மற்றும் ஆண்டாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.