இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கு சொந்தமான இராஜகிரிய-கோட்டே வீதியில் இல.353இல் அமைந்துள்ள மதுவரி தலைமையகத்தின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக 1913 எனும் துரித சேவை இலக்கத்துடனான மதுவரித் திணைக்கள செயற்பாட்டு மையம் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதோடு அதில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் யாவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயற்பாட்டு மையம் மூடப்பட்டிருந்த போதிலும் மக்கள் தங்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக வேறு சில தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், 071 63 45 291, 071 310 85 07 மற்றும் 071 812 23 33 ஆகிய இலக்கங்களினூடாக தகவல்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என மதுவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.