இந்தோனேசியாவில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 300 மில்லியன் ரூபா பெறுமதியான 23 பாக்கு கொள்கலன்களை இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்ய போலி ஆவணங்களை தயாரித்த உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட குறித்த நபர் வாதுவை பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.