நாட்டில் தற்போதைய அசாதாரண சூழலில் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரில் அதிக சன நெரிசல் காணப்படுகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று, வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பரவுகின்ற அசாதாரண நிலையிலே நாளையதினம் தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், பட்டாஸ்கள் , மரக்கறிகள் என பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
இருந்தும் பல இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள் முகக்கவசத்தினை அணிந்து வந்தாலும். சரியான சமூக இடைவெளியை பின்பற்றாததனை அவதானிக்க முடிகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயமும் வவுனியா நகரில் ஏற்பட்டுள்ளது.