சாவகச்சோி நகரில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

download 26
download 26

யாழ்.சாவகச்சோி நகரில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சோி நகரில் வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி, அக்கராயன்குளத்தை சேர்ந்த 31 வயதான கெவின் கிஷோகுமார் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.