தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த நால்வர் கைது

kaithu

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பானந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்