மண் அகழ்விற்கு எதிராக ஏ9 வீதியில் மக்கள் போராட்டம்

a9
a9

சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக ஏ9 வீதியை மறித்து இயக்கச்சி சந்தியில் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காரணமாக வீதிப்போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

துரித மண் அகழ்வால் கிராமம் பாதிக்கப்பட்டு அழிவடையும் சூழல் உருவாகுவதாகவும் மக்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து மக்கள் குறித்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.