கைதான சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர், இன்றைய தினம் புதுக்கடை போக்குவரத்து நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.