கொரோனாவிலிருந்து மேலும் 225 பேர் குணமடைந்தனர்

1618395134 3435927 hirunews
1618395134 3435927 hirunews

நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து, மேலும் 225 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,151 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுறுதியான 2,867 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.