நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து, மேலும் 225 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,151 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுறுதியான 2,867 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.