அதிகளவான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை

322px Nuwara22
322px Nuwara22

புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நகரிற்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலிய மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை காலத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் விடுதிகள் பூரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நுவரெலியாவிற்கு வருகை தருவதற்கு முன்னர் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.