ஜிபூட்டி கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் (ஐ.ஓ.எம்.) தெரிவித்துள்ளது.
ஏமனில் இருந்து சுமார் 60 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மக்கள் கடத்தல்காரர்களால் இயக்கப்படும் ஒரு படகு திங்கள்கிழமை ஜிபூட்டிக்கு செல்லும் வழியில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பதினாறு குழந்தைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைரோபியில் உள்ள ஐஓஎம் செய்தித் தொடர்பாளர் யுவோன் என்டேஜ் கூறுகையில், ‘கடத்தல்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. படகு மூழ்கி பதினான்கு பேர் உயிர் தப்பினர்’ என கூறினார்.
மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாட்டின் மோசமான நிலைமைகளின் காரணமாக புலம்பெயர்ந்தோர் யேமனில் இருந்து ஆபிரிக்காவின் ஹார்ன் செல்லவிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது