நாட்டில் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.