தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

Jaffna Municipal Council
Jaffna Municipal Council

யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட லப்டொப் மற்றும் ஏசி என்பனவற்றில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்ததால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் முதல்வர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் விஷேட அமர்வில் குறித்த பிரச்சினைக்கு நியாயம் வேண்டும் என முன்னாள் முதல்வர் யோகேஸ்வரியால் கோரப்பட்டது.

இதையடுத்து அவர்குறித்த பொருட்களை மீள கொடுத்தமைக்கான ஆதாரங்களையும் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து தர்சானந்தனின் குறித்த குற்றச்சாட்டு திட்டமிட்டவகையில் சுமத்தப்பட்டது என்று வெளிப்படையாக தெரிய வந்தது.

இது தொடர்பில் சட்டநடிவடிக்கை மேற்கொள்ள முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.