தென்னாப்பிரிக்காவில் சாதிக்குமா இங்கிலாந்து

GettyImages 826848198
GettyImages 826848198

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண் ரி-20 மற்றும் ஒரே ஒரு ஒருநாள் தொடர் அடங்கும்.

எதிர்பார்ப்பு மிக்க இந்த அணியில், பலமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

டெஸ்ட் அணியின் தலைவரான ஜோ ரூட், ரி-20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க விரும்பிய சகலதுறை வீரர் மொயீன் அலி, அணியில் இடம்பெற்றுள்ளார்.

பெட் பிரவுன், மத்தேயு பார்கின்சன், சாகிப் மஹ்மூத் மற்றும் டொம் பான்டன் ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், முன்னணி வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் ரி-20 தொடருக்கு திரும்புகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல்போட்டி பொக்ஸிங் டே அன்று சென்சுரியனில் ஆரம்பமாகவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கேப்டவுண் மைதானத்திலும், முதல் ரி-20 போட்டி எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கிழக்கு லண்டன்- பப்பலோ பார்க் மைதானத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது .