ஊடகவியலாளர்களை தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும், அதேவேளை ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி நிலை ஏற்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாங்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தரிவிக்கையில்;
என்னுடைய பல தவறுகளையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அதனை நான் வரவேற்றுள்ளேன். ஊடகவியலாளர்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதனை நாம் திருத்திக் கொள்ளலாம்.
ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் தேவை. பல அதிகாரிகளின் ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு ஊடகவியலாளர்கள் தேவை.
எனவே ஊடகவியலாளர்களை தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இல்லையேல் ஊடகவியலாளர்கள் தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் எனின் பல அதிகாரிகள் உள்ளே செல்லவேண்டி வரும் என அவர் எச்சரித்துள்ளார்.