நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்தனர்.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 5 பேர் நேற்று (16) இடம்பெற்ற விபத்துகளில் மரணித்தனர்.
ஏனைய ஐந்து பேர், நேற்றைய தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில், காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.