கடந்த 5 நாட்களில் நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் 399 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 2,242 வாகனங்கள் காவற்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.