கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில் அனுக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளது பிள்ளையான் உட்பட பிள்ளையானின் ஆதரவாளர்களிற்கு இந்த செய்தி பேரிடியான தகவல் .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தின் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துறை சந்திரகாந்தனை சந்தித்து நலன் விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.