நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக இன்று (19) ஆரம்பிக்கப்படுகின்றன.
கடந்த 9ஆம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினத்திலிருந்து இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மேல் மாகாண பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கான சுகாதார வழிகாட்டியானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சுகாதார வழிகாட்டியின் அடிப்படையிலேயே இன்றைய தினம் சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.