கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை

school 1
school 1

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (19) மீண்டும் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.