வவுனியாவில் நேற்று மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று இராணுவத்தினரை மோதி காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . இதன் வாகனத்தின் சாரதி வவுனியா சாந்தசோலை பகுதியில் தங்கியிருப்பதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இன்று பிற்பகல் 3 மணிமுதல் சாந்தசோலையில் சில பகுதிகளை முடக்கி குறித்த வாகனத்தின் சாரதியை தேடி சல்லடை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
நேற்று இரவு மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் படையினரின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்த முற்றப்பட்ட போது கடமையிலிருந்த படையினர் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதையடுத்து விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் குறித்த சாரதி சாந்தசோலையில் மறைந்திருப்பதாக தெரிவித்து சாந்தசோலை கிராமத்தில் முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, கிரேஷர் வீதி என்பனவற்றை முடக்கிய படையினர் அங்கிருந்து மக்கள் வெளியே வருவதையும் உட் செல்வதையும் சில நிமிடங்கள் தடை செய்திருந்தனர் . மாலை வரையும் இடம்பெற்ற இத் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து செல்கின்றது .
இதேவேளை சாந்தசோலையில் மரக்காலை ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.