யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பணிபுரியும் பராமரிப்பு பிரிவு ஊழியர்கள் 22 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வளாகத்தில் பணிபுரியும் மதவாச்சியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த ஊழியர் பணிபுரியும் பராமரிப்பு பிரிவை சேர்ந்த 22 ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதிசெய்யப்பட்ட குறித்த ஊழியர் கடந்த 9 ஆம் திகதிக்கு பின்னர் பணிக்கு வரவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது.