பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதி அச்சுவேலி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்லைச் சந்தியில் வைத்து இன்று மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பத்தலைவரும் 38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது என்று அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.