மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் சிறுபான்மை கட்சிகளிடம் ஆலோசனைகள் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ​தெரிவிப்பு!

1 2
1 2

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் ஏனைய சிறுபான்மை கட்சிகளிடம் ஆலோசனைகள் பெறவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர் அது குறித்த திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டான் கூறியுள்ளார்.