உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிறைவை முன்னிட்டு வவுனியாவில் வழிபாடு

IMG 20210421 101739
IMG 20210421 101739

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருட நினைவு தினநிகழ்வுகள் வவுனியா குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இறந்தவர்களிற்கு ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய பரிபாலனசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரபாகரக்குருக்கள், சந்திரகுமார் கண்ணன், தமிழருவி த.சிவகுமாரன், நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், கிராமசேவையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.