மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் விசேட ஆராதனை

IMG 1823
IMG 1823

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் விசேட ஆராதனை போதகர் மகேசன் ரொசான் தலைமையில் இன்று (21) இடம்பெற்றதுடன் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

குறித்த தேவாலயத்தில் கடந்த 2019ம் ஆண்டு குண்டு தாக்குதல் இடம்பெற்றது இதில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 70 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் விசேட ஆராதனை இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஆராதனையில் ஈடுபட்ட பின்னர் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மெழுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.