15 வயது பாடசாலை மாணவி மாயம்!

10 copy
10 copy

திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9ம் கல்விகற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயதுடைய சிறுமி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம் வாங்கிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..