2023 ஆம் ஆண்டுக்குள் 24 ஆயிரம் பேரை காவற்துறையில் இணைக்க எதிர்பார்த்துள்ளோம்-அஜித்ரோகண

snapshot 034
snapshot 034

வடமாகாணத்தின் காவல் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞசர்,யுவதிகள், இணைத்துக்கொள்ளுவதற்கு காவற்துறை தலைமையகம் முழுமையான அர்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை காவற்துறை திணைக்களத்தின் காவற்துறை சிரேஸ்ட அத்தியட்சகரும் ஊடக பேச்சாளருமாகிய அஜித்ரோகண தெரித்தார்.

இதன் ஊடாக தமிழ் மொழி இளைஞசர்கள்,யுவதிகள்காவல் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றினைய வேண்டிய காலத்தின் கட்டாயமாக காணப்படுககின்றது.

snapshot 028

சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஜக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளளோம். குறித்த தமிழ் மொழியில் இணைத்துக்கொள்ளும் போது தமது சொந்த மாவட்டங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்டங்களிலே கடமைபுரியவும் உள்ளனர்.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளின் 10 ஆயிரம் இளைஞர்கள்,யுவதிகள் காவற்துறை ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக்கொண்டோம்.அதன் பின்னர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 24 ஆயிரம் நபர்களை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளோம்.அதுவும் எமது எதிர்பார்ப்பு. என தெரிவித்தார். ஊடக பேச்சாளர் அஜித்ரோகண தெரித்தார்

snapshot 030

இலங்கை காவற்துறை திணைக்களம்,மற்றும் வடமாகாண காவல் நிலையத்தின் ஒன்றினைந்த ஏற்பாட்டில் தொழில்வாய்ப்பு அற்ற நிலை இருக்கும் தமிழ் இளைஞர்,யுவதிகளை காவற்துறை சேவைக்கான ஆளணியினை ஏற்படுத்தும் வகையில் வடமாகாணத்தினை பிரதித்துவபடுத்தும் கல்வி நிலையசார்ந்த அதிகாரிகள்,உத்தியோகத்தார்கள்,இளைஞர்,யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள்,காவற்துறை உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான செயலமர்வு இன்று யாழ் தனியார் விடுதி யூ.எஸ்.ஹோட்டலில் இடம்பெற்றது.

snapshot 031

குறித்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஊடக பேச்சாளர் அஜித்ரோகண இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்……

இதில் வடமாகாணத்தில் காவல் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்துமூலமாகவோ,வாய்மொழிமூலமாகவோ வருகின்றபோது காவற்துறை உத்தியோகத்தர்கள் அவ்வாறான மொழிப்பிரயோகங்களை தவற விடுகின்றனர்.எனவே அவ்வாறான எண்ண நிலைப்பாட்டினை தமிழ் இளைஞர்,யுவதிகள் கைகோர்க்கும் போது மாற்றமுடியும் அதுவும் இலங்கை காவற்துறை தலைமையகத்தின் கடமையும் ஆகும்.இதற்கான ஒத்துழைப்பினை வழங்க வடமாகாணத்தினை பிரதித்துவபடுத்தும் கல்வி நிலையசார்ந்த அதிகாரிகள்,உத்தியோகத்தார்கள்,இளைஞர்,யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள்,காவற்துறை உத்தியோகத்தர்கள் முன்வந்து இதனை கிராமசேவையாளர்கள் ரீதியாக சென்று விழிப்புணர்வினை எற்படுத்தவேண்டும் என இலங்கை காவற்துறை திணைக்களத்தின் காவற்துறை சிரேஸ்ட அத்தியட்சகரும் ஊடக பேச்சாளருமாகிய அஜித்ரோகண தெரிவித்தார்.

snapshot 033

இதில் தற்போதைய கல்வி நிலைமையில் இடைவிலகிய மாணவர்களின் தொழில்வாய்ப்புகள் அதன் சமூககட்டமைப்புகளும்,எதிர்காலத்தில் எற்படுத்தவேண்டிய சமூக நடவடிக்கை தொடர்பான விடையங்கள் பற்றியும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களினால் கலந்துரையாடப்பட்டன.

snapshot 035

இச் செயலமர்வில் இலங்கை காவற்துறை தலைமையகத்தின் சிரேஸ்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் எ.டி. பத்திநாயக்க,யாழ் மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபர் எல்.ஏ.சேனாநாயக்க,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.இளங்கோவன்,உள்ளிட்ட உயர் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.