அடிப்படைவாத சொற்பொழிவுகளில் பங்கேற்ற 3 பேர் குளியாப்பிட்டியில் கைது!

kaithu

சஹ்ரான் ஹஷீம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைவாத சொற்பொழிவுகளில் பங்கேற்ற 3 பேர் குளியாப்பிட்டி-கெக்குனகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.