மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்!

eeeeeee
eeeeeee

மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை இன்று (23) நாட்டிற்கு அழைத்து வர வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மியன்மார் அரசுடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறித்த மீனவர்களை விடுதலையாக்க முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இவர்கள் மியன்மாரின் யெங்கனில் இருந்து சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான Q761 எனும் விமானத்தில் சிங்கப்பூரை வந்தடைந்த பின் அங்கிருந்து Q468 எனும் விமானத்தில் கொழும்பை வந்தடையவுள்ளனர்.