ஸ்ரீகாந்தா தலைமையில் உதயமானது புதிய கட்சி!

IMG 3633
IMG 3633

ரெலோவின் முன்னாள் செயலாளர் ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சிஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது . இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த கட்சி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது

அதேவேளை தமிழினத்தின் போர் வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கிறது எனவும் தமிழினம் தன்னைத்தானே ஆளவும் சுதந்திரத்தோடு வாழவும் விரும்புகிறது என்பதை மனதில் பதித்து தமிழ் தேசியக் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என அதன் தலைவர் ஸ்ரீகாந்தா அறிவித்தார்.

அத்துடன், முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

அத்துடன் புதிய கட்சியின் செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிவகுருநாதன், சட்டத்துறை செயலாளராக சட்டத்தரணி ஜெயகாந்தன், தேசிய அமைப்பாளராக சில்வெஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர, கல்வி, நிதி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது .