ரணில் தொடர்பில் வெளியானது புதிய தகவல்

4addc39d860682428eda9e8d96723e1e XL
4addc39d860682428eda9e8d96723e1e XL

.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைமையில் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லையென கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக
எழுப்பப்பட் ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம்

ரணில் 2025ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை. அதேபோன்று, தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் வாய்ப்பையும் தேர்தலுக்கு பின்னர் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் விட்டுக் கொடுத்தார் அவருக்கும் கட்சியின் தலைமையில் தொடர்ந்திருக்கும் நோக்கமில்லை.

கட்சியை ஒன்றிணைக்காது, எதிர்க் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தாது கட்சியை விட்டு விலக முடியாது. அவ்வாறு சென்றால் அனைவரும் குற்றஞ்சாட்டுவார்கள் எனக் கூறியுள்ளார்.

அதனால், குறிப்பிட்ட காலம் வரை கட்சியில் அனைவருடன் இணைந்து கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வரை கட்சியின் தலைமைத்துவத்தை விட்டு விலக மாட்டார் என அவர் கூறியுள்ளார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்