அரசியல் பயணத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன்!!

8 d
8 d

அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தினை அமைக்க நேரிட்டால் அரசியல் பயணத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்ற விடயத்தில் உறுதியாக உள்ளதாக முதலீட்டு பகுப்பாய்வு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அஸ்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் பலமான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையே பாராளுமன்ற தேர்தலில் தொடரும். பெரும்பான்மையான ஆதரவினை பெற்று பலமான அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியும்.

பொதுத்தேர்தலிலும் நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.