சிவனொளிபாத மலைக்கு சென்ற இரு இளைஞர்களிடம் கஞ்சா போதைபொருள் வைத்திருந்தற்காக மஸ்கெலியா பொலிஸார் நேற்று மாலை மவுசாக்கலை சோதனை சாவடியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,
நேற்று மாலை வேளையில் மவுசாக்கலை சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது 23 வயதுடைய தெல்தொட மயிலபிட்டியவை சேர்நத இளைஞர் ஒருவரும் 22 வயதுடைய பேலான பகுதியை சேர்ந்த ஒருவரும் கஞ்சா வைத்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரும் இன்று 15ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.