நெத்தலியாற்றுப் பாலத்தினை மீளமைக்குமாறு கவனயீர்ப்பு

1a 1
1a 1

கிளிநொச்சி பரந்தன் ஏ-35 விதியின் வெள்ள பாதிப்பை தடுக்கும்வகையில் தர்ம்புரம் நெத்தலியாற்றுப் பாலத்தினை மீளமைக்குமாறும் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க கோரியும் தர்மபுரத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நெத்தலியாறு காலத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் ஏ35 வீதியின் ஒருபகுதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்ப மகஜர் ஒன்றினையும் தர்மபுரம் புனித சபேரியார் ஆலய பங்குத்தந்தை அன்ரனி வின்சன் சில்வஸ்டர் தாஸிடம் கையளித்தனர்.