வவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்டவருக்கு எதிராக முறைப்பாடு

bail 1
bail 1

வவுனியா திருநாவற்குளம் பகுதியிலுள்ள ஒருவரின் வீடு திருத்தம் செய்து தருவதாக தெரிவித்து இரண்டு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்களாக ஏமாற்றி வருவதாகவும் தன்னிடம் பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பித்தருமாறு கோரி வவுனியா தலைமை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

கடந்த பெப்ரவரி மாதம் தனது வீடு திருத்தம் செய்து தருவதாக தெரிவித்த கோவிந்தராஜா கிரிபரன் என்பவர் தன்னிடம் இரண்டு இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டு மூன்று மாதங்களாகியும் வீடு திருத்தம் செய்து தரவில்லை. பெற்றுக்கொண்ட பணத்தைத்தையும் திருப்பித்தரவில்லை. மூன்று மாதங்களாக என்னை ஏமாற்றி வருகின்றார். எனவே என்னிடம் பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பித்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி வவுனியா காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு , மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார் .