வவுனியா பிரதேச செயலகத்தில் சமூகசேவைகள் பிரிவுக்கான புதியகட்டிட தொகுதி இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைப்பு செயலாளர் கி. தினேஸ் ஆகியோரால் குறித்த கட்டடம் உத்தியோக பூர்வமாக நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.